search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் நர்சிங் கல்லூரி ஆசிரியை தற்கொலை
    X

    புதுவையில் நர்சிங் கல்லூரி ஆசிரியை தற்கொலை

    புதுவையில் நர்சிங் கல்லூரி ஆசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சித்தன்குடி செல்லும் சாலையில் சாணக்கியா அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் கலைக்குமார். இவரது மகள் ஹேமாஆனந்தி (வயது28). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நர்சிங் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஹேமா ஆனந்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ஹேமாஆனந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மின்விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×