என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவாடானையில் சாலையோர பள்ளங்களை மூடக் கோரிக்கை
தொண்டி:
திருவாடானை அருகே பாரதிநகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்திற்கு அருகில் பல மாதங்களுக்கு முன்பு குழாய் உடைப்பை சரிசெய்ய பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.
உடைப்பு சரிசெய்யப்பட்ட நிலையில் இதுநாள் வரை அந்த ஆபத்தான பள்ளத்தை மூடவில்லை. இந்த பள்ளமானது மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.
அதே போல் திருவாடானை நான்கு முக்கு சந்திப்பு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக பல மாதங்களாக தண்ணீர் ஓடிய நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் உடனடியாக உடைப்பு சரி செய்யப்பட்டது.
ஆனால் அதற்காக தோண் டிய பள்ளம் இன்னமும் மூடப்படவில்லை. இந்த சாலை மிகவும் போக்கு வரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும் எனவே குடிநீர்வடிகால் வாரியம் பள்ளங்களை மூட இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்