என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கிரானைட் லாரி கவிழ்ந்து விபத்து- டிரைவர் உடல் நசுங்கி பலி
Byமாலை மலர்8 Sep 2018 8:58 AM GMT (Updated: 8 Sep 2018 8:58 AM GMT)
மேலூர் அருகே இன்று கிரானைட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலூர்:
ஓசூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மதுரை வந்தது. இதனை ஓசூரைச் சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்தார்.
இன்று காலை மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மணல்பட்டி 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கிரானைட் கற்கள் உடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் கிரானைட் கற்கள் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
டோல்கேட் மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரி, கிரானைட் கற்களை அப்புறப்படுத்தினர். #tamilnews
ஓசூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மதுரை வந்தது. இதனை ஓசூரைச் சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்தார்.
இன்று காலை மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மணல்பட்டி 4 வழிச் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென லாரியின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கிரானைட் கற்கள் உடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் கிரானைட் கற்கள் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
டோல்கேட் மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரி, கிரானைட் கற்களை அப்புறப்படுத்தினர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X