search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே டாக்டர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
    X

    வில்லியனூர் அருகே டாக்டர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

    வில்லியனூர் அருகே டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பாரிவேந்தன் (வயது 28). இவர், எம்.பி. பி.எஸ். டாக்டர் படிப்பு முடித்திருந்தார்.

    பின்னர் அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்து வந்தார்.

    இவர், அரியூரில் உள்ள அருண் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவருடன சில மாணவர்களும் தங்கி இருந்தனர்.

    நேற்று வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். இன்று காலை சக மாணவர்கள் பார்த்த போது, பாரிவேந்தன் படுக்கையிலேயே மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார்.

    உடனே அவர்கள் அவரை மீட்டு தாங்கள் படித்து வரும் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது பாரிவேந்தன் இறந்து பல மணி நேரம் ஆகி விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பாரிவேந்தன் உடலை கதிர்காமம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாரிவேந்தன் உடலில் எந்தவொரு காயமும் இல்லை. அவர் மர்மமான முறையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரிய வரும்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×