search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் ஓட்டல் அதிபர் கடத்தல்
    X

    சேலத்தில் ஓட்டல் அதிபர் கடத்தல்

    சேலத்தில் ஓட்டல் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 45). இவர் அம்மா உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடதி வருகின்றனர்.

    விசாரணையில் கோபி கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை கடத்தியது யார்? எதற்காக அவர் கடத்தப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×