என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலங்காநல்லூர், உசிலம்பட்டியில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்16 Aug 2018 8:21 AM GMT (Updated: 16 Aug 2018 8:21 AM GMT)
அலங்காநல்லூர், உசிலம்பட்டியில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
உசிலம்பட்டி அருகில் உள்ள நக்கலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி கலாதேவி (வயது 34). இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் வீட்டை பூட்டிவிட்டு கா.விலக்கு பகுதியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார்.
இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.36 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக கலாதேவி உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு முல்லை நகரைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி சவுந்தரம் (63). இவர் மகனுடன் சோழவந்தான் கோவிலுக்குச் சென்றார்.
அப்போது யாரோ சிலர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சவுந்தரம் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
உசிலம்பட்டி அருகில் உள்ள நக்கலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி கலாதேவி (வயது 34). இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எனவே அவர் வீட்டை பூட்டிவிட்டு கா.விலக்கு பகுதியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார்.
இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.36 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக கலாதேவி உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு முல்லை நகரைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி சவுந்தரம் (63). இவர் மகனுடன் சோழவந்தான் கோவிலுக்குச் சென்றார்.
அப்போது யாரோ சிலர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சவுந்தரம் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X