search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் பகுதியில் வெண்டைக்காய் அதிக விளைச்சல்- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    ஓமலூர் பகுதியில் வெண்டைக்காய் அதிக விளைச்சல்- விவசாயிகள் மகிழ்ச்சி

    ஓமலூர் பகுதிகளில் வெண்டை விளைச்சல் அமோகமாக இருப்பதால் அதிக அளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு அதிக அளவில் கரும்பு, வெண்டைக்காய், நெல், மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, சாமந்திப் பூ, குண்டுமல்லி, உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுவது வழக்கம்.

    மேலும் வறட்சியான பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு காய்கறிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெண்டை பயிர் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.

    தற்போது வெண்டை பயிர் அறுவடைக்கு வந்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். தற்போது ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் ஒரு கிலோ வெண்டை ரூ.15 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாவதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து சரவணன் என்ற விவசாயி கூறும்போது, வெண்டை எந்த பருவத்தில் வேண்டுமானாலும் பயிர் செய்யலாம். வெண்டை விதை ஊன்றப்பட்டு 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். இதற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தினமும் வெண்டைக்காயை பறித்து உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் ஓமலூர் பகுதிகளில் வெண்டை அதிக அளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×