search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் இன்று காலை மரக்கடையில் தீ விபத்து
    X

    சிவகாசியில் இன்று காலை மரக்கடையில் தீ விபத்து

    சிவகாசியில் இன்று காலை மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. #shopfire

    சிவகாசி:

    சிவகாசி காத்த நாடார் தெருவில் ஜனகர் என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. வியாபரம் முடிந்ததும் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் கடையில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியானது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதுகுறித்து கடையின் காவலாளி கருப்பையா சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல் பட்டதால் அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

    தீ விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #shopfire

    Next Story
    ×