search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்திய இலங்கை வாலிபர் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்திய இலங்கை வாலிபர் கைது

    சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்திய இலங்கையை சேர்ந்த வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை :

    வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். 

    இந்தநிலையில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், விக்னேஷ் என்ற இலங்கையை சேர்ந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் எதுவுமில்லை. 

    ஆனால், விக்னேஷை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில் அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

    ரூ.15 லட்சம் மதிப்பிலான 487 கிராம் எடையுடைய தங்கம் அவரிடம் இருந்துள்ளது. இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
    Next Story
    ×