search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
    X

    திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

    திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதி செய்ய கோரி கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி பாரதிதாசன் மாதிரிக் கல்லூரியில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

    இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் கணேஷ், நகர செயலாளர் குமார், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் முருகேசு, மாவட்ட துணை செயலாளர் துரை அருள்ராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கல்லூரிக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுறுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரியும் கல்லூரிக்கு தியாகி சீனிவாசராவ் பெயரை சூட்ட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×