என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண்கள் மாயம்
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி கோனார் தெருவை சேர்ந்தவர் கோபால் மகள் சரண்யாதேவி(வயது22). தேனி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். மில்வேன் மூலம் வேலைக்கு சென்றுவந்துள்ளார். சம்பவத்தன்றும் வழக்கம்போல் சரண்யாதேவி மில்வேலைக்கு சென்றுள்ளார்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சரண்யா தேவியை தேடி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் அருகே கே.கே.பட்டியை சேர்ந்தவர் மலர்ராஜ் மகள் மலர்பிரியா(வயது21). கம்பத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மலர்பிரியா வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்