search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே மாடு மீது மோதி மெக்கானிக் பலி
    X

    முத்துப்பேட்டை அருகே மாடு மீது மோதி மெக்கானிக் பலி

    முத்துப்பேட்டை அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் காசடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 40). இவர் ஆசாத்நகர் அருகே மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ஆலங்காடு அருகே சாலையின் குறுக்கே வந்த மாடுகள் மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அய்யப்பன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    Next Story
    ×