என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் 5 நாளில் 5 அடி உயர்வு
Byமாலை மலர்5 July 2018 10:17 AM GMT (Updated: 5 July 2018 10:17 AM GMT)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 62.59 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சேலம்:
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையில் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் கடந்த 30-ந் தேதி 57.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 62.59 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2495 அடியாக இருந்தது. நேற்று 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.
124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.93 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 4476 கன அடியாக இருந்தது . அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்காக 3434 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி 18 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்த நிலையில் நேற்று தண்ணீர் வரத்து 7007 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 5908 கன அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையில் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் கடந்த 30-ந் தேதி 57.11 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 62.59 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் 5 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 82.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2495 அடியாக இருந்தது. நேற்று 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை முதல் 1000 கன அடியாக குறைக்கப்பட்டது.
124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.93 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 4476 கன அடியாக இருந்தது . அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்காக 3434 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி 18 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்த நிலையில் நேற்று தண்ணீர் வரத்து 7007 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 5908 கன அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X