search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டுவில் அரசு பள்ளி கதவை உடைத்து கொள்ளை
    X

    வத்தலக்குண்டுவில் அரசு பள்ளி கதவை உடைத்து கொள்ளை

    வத்தலக்குண்டுவில் அரசு பள்ளி கதவை உடைத்து கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு வெங்கிட்டாபட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்துக்குள் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்குள் சம்பவத்தன்று இரவு புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

    மறு நாள் பள்ளிக்கு வந்த அதிகாரிகள் அலுவலகத்தில் கொள்ளை நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மேற்பார்வையாளர் சகாய செல்வி வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×