search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மானியம் வராததால் அம்மா ஸ்கூட்டர் வழங்குவதில் தாமதம்
    X

    அரசு மானியம் வராததால் அம்மா ஸ்கூட்டர் வழங்குவதில் தாமதம்

    அரசு மானியம் வராததால் அம்மா ஸ்கூட்டர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மானியம் கிடைக்காத பல பெண்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். #AmmaScooter
    சென்னை:

    தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் அம்மா ஸ்கூட்டர் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின்கீழ் 18-ல் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஸ்கூட்டர் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் மற்ற பகுதிகளில் பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கலெக்டர் அலுவலகங்களிலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பம் செய்தனர்.

    இந்த ஆண்டு ஒரு லட்சம் அம்மா ஸ்கூட்டர்கள் மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    எஞ்சியவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இன்னும் அரசிடம் இருந்து மானியம் கிடைக்காததால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னையில் மட்டும் 9,500 பேர் தேர்வு செய்யப்பட்டு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 6000 பேருக்கு மானியம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்னும் மானியம் கிடைக்காத பல பெண்கள் மாநகராட்சி அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். #AmmaScooter

    Next Story
    ×