search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே சிறுமியை நண்பருடன் கற்பழித்த வாலிபர்
    X

    திண்டுக்கல் அருகே சிறுமியை நண்பருடன் கற்பழித்த வாலிபர்

    திண்டுக்கல் அருகே 14 வயது சிறுமியை நண்பருடன் வாலிபர் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதே மில்லில் அழகுசமுத்திரப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மகன் பிரபாகரன் (வயது 19) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

    பிரபாகரனின் நண்பர் சதீஸ்குமார் (23). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். சிறுமி தினமும் மில் வேலைக்கு வேனில் சென்று வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த போது சதீஸ்குமார், சிறுமியின் செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டார்.

    இது குறித்து பிரபாகரனிடம் சிறுமி தெரிவித்து தனது செல்போனை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். அதன்படி வேலை முடிந்து சிறுமியை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பிரபாகரன் அழகுசமுத்திரப்பட்டி அருகே உள்ள குளக்கரைக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு ஏற்கனவே சதீஸ்குமார் குடிபோதையில் இருந்துள்ளார். செல்போனை தருவதாக கூறி பிரபாகரனும், சதீஸ் குமாரும் பலவந்தப்படுத்தி கற்பழித்தனர். பின்னர் அந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.

    பலத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்த சிறுமியிடம் அவரது பெற்றோர்கள் கேட்டபோது கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் தனது செல்போனை சிறுமி சதீஸ்குமாரிடம் கேட்டுள்ளார்.

    இதனையடுத்து அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்து மறைவான பகுதியில் வைத்து மீண்டும் கற்பழிக்க முயன்றுள்ளார். சிறுமி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர். இதனால் சதீஸ்குமார் தப்பி ஓடி விட்டார். பின்னர் நடந்த சம்பவங்களை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன், சதீஸ்குமார் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tamilnews
    Next Story
    ×