search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேசின் பிரிட்ஸ் யார்டில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது
    X

    பேசின் பிரிட்ஸ் யார்டில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது

    சென்னை பேசின் பிரிட்ஜில் ரெயில்வே யார்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீப்பிடித்ததில் பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை பேசின் பிரிட்ஜில் ரெயில்வே யார்டு உள்ளது. இங்கு ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 8-வது பிளாட் பாரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான மாற்று பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒரு ரெயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரியத் தொடங்கியது.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்களும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காலை 7.15 மணிக்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.

    இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்த சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×