என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று 44-வது பிறந்தநாள்: தீபா ஜெயலலிதா சமாதியில் வணங்கினார்
Byமாலை மலர்10 Nov 2017 9:22 AM GMT (Updated: 10 Nov 2017 9:22 AM GMT)
தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.
சென்னை:
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பில் ஏற்பட்ட கோஷ்டி பூசலும், குடும்ப பிரச்சனையும் தீபாவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியதோடு அமைப்பிலும் தீவிரமாக செயல்பட முடியவில்லை.
தீபாவின் கணவர் மாதவனுக்கும், கட்சி நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போலீஸ் நிலையம் வரை சென்றது. அப்போது தீபா கணவருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து சில நாட்கள் தீபா மாயமானார். இதனால் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.
இன்று காலையில் தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.
இந்த அமைப்பில் ஏற்பட்ட கோஷ்டி பூசலும், குடும்ப பிரச்சனையும் தீபாவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியதோடு அமைப்பிலும் தீவிரமாக செயல்பட முடியவில்லை.
தீபாவின் கணவர் மாதவனுக்கும், கட்சி நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போலீஸ் நிலையம் வரை சென்றது. அப்போது தீபா கணவருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தையடுத்து சில நாட்கள் தீபா மாயமானார். இதனால் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.
இன்று காலையில் தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X