search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காட்டில் திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது
    X

    களக்காட்டில் திருட்டில் ஈடுபட்ட தம்பதி கைது

    களக்காட்டில் கவரிங் பொருட்கள் விற்பனை கடையில் திருட்டில் ஈடுபட்டதாக தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டன.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது40). இவர் களக்காடு அண்ணா சாலையில் கவரிங் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். சம்பவத் தன்று இந்த கடைக்கு வந்த 2 பேர் அங்குள்ள கடிகாரம், வாட்ச் மற்றும் கவரிங் பொருட்களை திருடி சென்றது கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிந்து சிங்கையை சேர்ந்த பாலசுப்பிரமணி (43), அவரது மனைவி கவிதா (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த திருட்டு போன பொருட்கள் மீட்கப்பட்டன.
    Next Story
    ×