என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திண்டுக்கல் அருகே குடிமகன்களின் கூடாரமான கல்லூரி பஸ் நிறுத்தம் திண்டுக்கல் அருகே குடிமகன்களின் கூடாரமான கல்லூரி பஸ் நிறுத்தம்](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705121825079071_Drunkards-use-college-bus-stand-as-bar-near-dindigul_SECVPF.gif)
X
திண்டுக்கல் அருகே குடிமகன்களின் கூடாரமான கல்லூரி பஸ் நிறுத்தம்
By
மாலை மலர்12 May 2017 12:55 PM GMT (Updated: 12 May 2017 12:55 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் பஸ்நிறுத்தம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் - கரூர் ரோட்டில் ஜி.டி.என். கல்லூரி முன்பு பஸ் ஸ்டாப் உள்ளது. தற்போது கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிலரே பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். சமீப காலமாக இந்த பஸ் ஸ்டாப் குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது.
பயணிகள் அமரும் இடத்தில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர், அவர்கள் சாப்பிட்ட மிச்சர், ஊறுகாய் பாக்கெட்டுகள் ஆகியவையே சிதறி கிடக்கின்றன. இது மட்டுமின்றி அழுக்கு ஆடைகளும் உள்ளது. ஆடுகள் மற்றும் மாடுகள் வெயிலுக்கு ஒதுங்கி இளைப்பாறி செல்கின்றன. ஆனால் மக்கள் இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாலை நேரத்தில் குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி வைத்து பஸ் ஸ்டாப்பில் குடித்து வருவதாகவும் அதன் பிறகு போதை தலைக்கேறிய பின் அதே இடத்தில் தூங்கி விட்டு பின்னர் சென்று விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் தற்போது அவர்களுக்கும் பயனில்லாமல் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இந்த இடத்தில் அசாதாரண நிலை நிலவி வருவதால் அதனை போக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் - கரூர் ரோட்டில் ஜி.டி.என். கல்லூரி முன்பு பஸ் ஸ்டாப் உள்ளது. தற்போது கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிலரே பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். சமீப காலமாக இந்த பஸ் ஸ்டாப் குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது.
பயணிகள் அமரும் இடத்தில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர், அவர்கள் சாப்பிட்ட மிச்சர், ஊறுகாய் பாக்கெட்டுகள் ஆகியவையே சிதறி கிடக்கின்றன. இது மட்டுமின்றி அழுக்கு ஆடைகளும் உள்ளது. ஆடுகள் மற்றும் மாடுகள் வெயிலுக்கு ஒதுங்கி இளைப்பாறி செல்கின்றன. ஆனால் மக்கள் இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாலை நேரத்தில் குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி வைத்து பஸ் ஸ்டாப்பில் குடித்து வருவதாகவும் அதன் பிறகு போதை தலைக்கேறிய பின் அதே இடத்தில் தூங்கி விட்டு பின்னர் சென்று விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் தற்போது அவர்களுக்கும் பயனில்லாமல் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இந்த இடத்தில் அசாதாரண நிலை நிலவி வருவதால் அதனை போக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)