என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிர் கருகியதால் மாரடைப்பால் விவசாயி பலி
Byமாலை மலர்28 March 2017 7:58 AM GMT (Updated: 28 March 2017 7:58 AM GMT)
திருத்துறைப்பூண்டி அருகே பயிர் கருகிய வேதனையில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 71). விவசாயி.
இவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்து இருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. மேலும் பயிர் பாதிப்புக்கான காப்பீடு தொகையும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் கடன் அதிகமானதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்கராசு வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கராசை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தங்கராசுக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 71). விவசாயி.
இவருக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்து இருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. மேலும் பயிர் பாதிப்புக்கான காப்பீடு தொகையும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் கடன் அதிகமானதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்கராசு வயலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கராசை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தங்கராசுக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவியும், சரவணன் என்ற மகனும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X