என் மலர்
செய்திகள்

நன்னிலம் அருகே குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த வாலிபர் கைது
நன்னிலம் அருகே குடிபோதையில் போலீசிடம் தகராறு செய்த வாலிபரை கைது செய்தனர்.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள சன்னாநல்லூர் கடைத் தெருவில் நன்னிலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வாகன தணிக்கைச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஆண்டிப்பந்தல் சேதுராமன் நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் இளவரசன் (வயது45). இவர் குடிபோதையில் கடுமையாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவரை கண்டித்த தமிழ்வாணனிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக தமிழ்வாணன் நன்னிலம் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பேரில் வழக்குப் பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர்.
Next Story