என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றும் போலீசார்
Byமாலை மலர்28 Feb 2017 5:32 AM GMT (Updated: 28 Feb 2017 5:32 AM GMT)
போலீஸ் அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா படத்திற்கு பதிலாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை மாட்டி வருகிறார்கள்.
சென்னை:
அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் படங்களை மாட்டி வைத்திருப்பது வழக்கம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் படங்களை அகற்றுவதா? வேண்டாமா? என்று பல அலுவலகங்களில் தயக்கத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் போலீஸ் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றி வருகிறார்கள்.
தேவையில்லாத சர்ச்சையில் காவல்துறை சிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
சுவரில் மாட்டப்பட்டிருந்தது மட்டுமில்லாமல் மற்றொரு போட்டோவை சில அதிகாரிகள் மேஜை மீதும் வைத்திருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் அகற்றி வருகிறார்கள்.
அதற்கு பதிலாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை மாட்டி வருகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்த படங்களும் அகற்றப்பட்டு விட்டன. படங்களை அகற்றும்படி உத்தரவு எதுவும் வரவில்லை. நாங்களாகவே அகற்றினோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அலுவலகங்களில் முதல்-அமைச்சர் படங்களை மாட்டி வைத்திருப்பது வழக்கம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் படங்களை அகற்றுவதா? வேண்டாமா? என்று பல அலுவலகங்களில் தயக்கத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் போலீஸ் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படங்களை அகற்றி வருகிறார்கள்.
தேவையில்லாத சர்ச்சையில் காவல்துறை சிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
சுவரில் மாட்டப்பட்டிருந்தது மட்டுமில்லாமல் மற்றொரு போட்டோவை சில அதிகாரிகள் மேஜை மீதும் வைத்திருந்தார்கள். இப்போது எல்லாவற்றையும் அகற்றி வருகிறார்கள்.
அதற்கு பதிலாக தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் போட்டோவை மாட்டி வருகிறார்கள்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்த படங்களும் அகற்றப்பட்டு விட்டன. படங்களை அகற்றும்படி உத்தரவு எதுவும் வரவில்லை. நாங்களாகவே அகற்றினோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X