என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கம்பம் அருகே தாயிடம் பணம் கேட்டதால் அண்ணனை வெட்டிய வாலிபர்
தேனி:
கம்பம் அருகே உள்ள கூடலூர் கருநாக்கன்முத்தன் பட்டியைச் சேர்ந்தவர் சிங்கத்துரை. இவரது மனைவி மாயக்காள். இவர்களுக்கு அய்யர் (வயது 24), செல்வேந்திரன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
திருமணமான அய்யர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கர்ப்பமான அவரது மனைவி பிரசவத்துக்காக பல்லடத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து அய்யர் அடிக்கடி தாயிடம் வந்து பணம் வாங்கிச் சென்றுள்ளார். இது தம்பி செல்வேந்திரனுக்கு பிடிக்க வில்லை. தனிக்குடித்தனம் சென்ற பின்னர் ஏன் அடிக்கடி வந்து பணம் கேட்கிறாய்? என்று தட்டிக் கேட்டார். இதனால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த செல்வேந்திரன் அரிவாளால் அண்ணனை வெட்டினார். பலத்த காயமடைந்த அய்யர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வேந்திரனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்