என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே மதகுபட்டியில் போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிப்பு
Byமாலை மலர்13 Feb 2017 10:40 AM GMT (Updated: 13 Feb 2017 10:40 AM GMT)
சிவகங்கை அருகே போலீஸ்காரரை தாக்கி செல்போனை பறித்து சென்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் சிங்காரவேலன் (வயது 34). இவர் நேற்று ரோந்து மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு வயல் பகுதியில் 7 வாலிபர்கள் மது குடித்து கொண்டு இருந்தனர். அவர்களை போலீஸ்காரர் சிங்காரவேலன் பொது இடத்தில் மது குடிப்பது தவறு. எனவே கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். அப்போது 7 பேரும் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிங்காரவேலன் மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். அதில், புதுப்பட்டியைச் சேர்ந்த தனசேகரன் (வயது 29), தனபால் (25), வினோத் (22), சுகுமார் (23) உள்பட 7 பேர் தன்னை தாக்கி செல்போனை பறித்துச் சென்றதாக கூறியுள்ளார்.
புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 7 பேரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X