என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்துக்குள்ளான கப்பல்களை சிறைப்பிடிக்க உத்தரவிட ஐகோட்டு மறுப்பு
Byமாலை மலர்3 Feb 2017 9:31 AM GMT (Updated: 3 Feb 2017 9:32 AM GMT)
எண்ணூர் கடலில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களை சிறைப்பிடிக்க உத்தரவிடகோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
எண்ணூர் கடலில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களையும் சிறை பிடித்து, முறையான இழப்பீட்டை அந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடகோரி சென்னை ஐகோர்ட்டில் தேசிய மீனவர் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘கப்பலை சிறைப் பிடிப்பது, அந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து உரிய இழப்பீடு பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
எண்ணூர் கடலில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களையும் சிறை பிடித்து, முறையான இழப்பீட்டை அந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடகோரி சென்னை ஐகோர்ட்டில் தேசிய மீனவர் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘கப்பலை சிறைப் பிடிப்பது, அந்த கப்பல் நிறுவனங்களிடம் இருந்து உரிய இழப்பீடு பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X