search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    திருச்செந்தூர் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

    திருச்செந்தூர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளையை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள பெஞ்சமின் காலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 28). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பின் சுந்தர்ராஜ் சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது மனைவி ராஜேஸ்வரி கண்டித்தாராம். இதனால் மன வேதனை அடைந்த சுந்தர்ராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×