search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை
    X

    பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை

    பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றனர்.

    தேனி:

    பெரியகுளம் தெற்கு ரத வீதியில் ஸ்ரீகாந்தன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் உள்ளது. சம்பவத்தன்று தனது அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களின் ஆர்.சி. புக்குகள், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கார் பேட்டரிகள் ஆகியவை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.14 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து ஸ்ரீகாந்தன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×