என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வார்தா புயல் பாதிப்பு: மீனவர்களுக்கு ரூ.19 கோடி நிதி உதவி - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
Byமாலை மலர்27 Jan 2017 9:59 AM GMT (Updated: 27 Jan 2017 9:59 AM GMT)
வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.19 கோடி நிதி உதவி வழங்கி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை:
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி கேள்வி நேரத்தின்போது, “திருவொற்றியூரில் 10 இடங்களில் தூண்டில் வளைவுக்காக போடப்பட்டிருந்த கற்கள் வர்தா புயலால் கடலில் சரிந்துள்ளதாகவும், கட்டுமரம், நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உதவித்தொகை வழங்கவில்லை என்றும் அதில் அறிவித்துள்ள தொகை குறைவாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சேபம் தெரிவித்து அவையில் தவறான தகவலை சொல்லக்கூடாது என்றும், இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சில விளக்கங்களை தெரிவித்தார்.
அப்போது, வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக ரூ.19 கோடி நிதிஉதவி வாரி வழங்கியுள்ளதாக கூறினார். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னதற்கு தி.மு.க. எம்.ஏல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி கேள்வி நேரத்தின்போது, “திருவொற்றியூரில் 10 இடங்களில் தூண்டில் வளைவுக்காக போடப்பட்டிருந்த கற்கள் வர்தா புயலால் கடலில் சரிந்துள்ளதாகவும், கட்டுமரம், நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உதவித்தொகை வழங்கவில்லை என்றும் அதில் அறிவித்துள்ள தொகை குறைவாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சேபம் தெரிவித்து அவையில் தவறான தகவலை சொல்லக்கூடாது என்றும், இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சில விளக்கங்களை தெரிவித்தார்.
அப்போது, வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக ரூ.19 கோடி நிதிஉதவி வாரி வழங்கியுள்ளதாக கூறினார். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னதற்கு தி.மு.க. எம்.ஏல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X