என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயிர்பயத்திலும் கலங்காத பெண் போலீஸ் துர்காதேவி
Byமாலை மலர்26 Jan 2017 8:10 AM GMT (Updated: 26 Jan 2017 8:10 AM GMT)
சென்னை ஐஸ்அவுஸ் போலீஸ்நிலையம் எரிந்த போது உயிர்பயத்திலும் கலங்காமல் உயர் அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்த துர்காதேவியின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை:
சென்னையில் மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் போலீஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது.
போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் போலீஸ் நிலையத்தை வெளிபக்கமாக பூட்டிவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அப்போது போலீஸ் நிலையத்தினுள் 16 போலீசார் இருந்தனர். அவர்கள் உயிர் பிழைப்பதற்காக போராடினர். போலீஸ் நிலையத்தின் முன்புறம் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்தினுள் இருந்த துர்கா தேவி என்ற பெண் போலீசும் உயிர் பயத்தில் தவித்தபடி இருந்தார். பரபரப்பான அந்த சூழ்நிலையில் கலங்காமல் அவர் உடனடியாக வாக்கி டாக்கியில் போலீஸ் நிலையம் தீப்பற்றி எரியும் தகவலை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்தே போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வலது பக்கத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த அனைத்து போலீசாரையும் பத்திரமாக வெளியில் வரச்செய்தனர்.
பெண் போலீஸ் துர்கா தேவியின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
சென்னையில் மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் போலீஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது.
போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் போலீஸ் நிலையத்தை வெளிபக்கமாக பூட்டிவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
அப்போது போலீஸ் நிலையத்தினுள் 16 போலீசார் இருந்தனர். அவர்கள் உயிர் பிழைப்பதற்காக போராடினர். போலீஸ் நிலையத்தின் முன்புறம் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்தனர்.
அப்போது போலீஸ் நிலையத்தினுள் இருந்த துர்கா தேவி என்ற பெண் போலீசும் உயிர் பயத்தில் தவித்தபடி இருந்தார். பரபரப்பான அந்த சூழ்நிலையில் கலங்காமல் அவர் உடனடியாக வாக்கி டாக்கியில் போலீஸ் நிலையம் தீப்பற்றி எரியும் தகவலை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்தே போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வலது பக்கத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த அனைத்து போலீசாரையும் பத்திரமாக வெளியில் வரச்செய்தனர்.
பெண் போலீஸ் துர்கா தேவியின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X