என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழர்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு: பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ராதா ராஜன்
Byமாலை மலர்22 Jan 2017 3:49 PM GMT (Updated: 22 Jan 2017 3:49 PM GMT)
மெரினாவில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களை கொச்சைப்படுத்தும் கருத்து தெரிவித்த ராதா ராஜன் பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை:
சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் அளித்த பேட்டியில் சென்னை மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இழிவு படுத்தும் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் சமூக வலைத்தள வாசிகள் அவர் மீது கோபம் கலந்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ராதா ராஜன், தான் தெரிவித்த கருத்திற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் துவங்கும் முன்பே சர்வதேச செய்தி நிறுவனம் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன். அதில் நான் தெரிவித்த பதிலை பொது மக்கள் தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டுள்ளனர்.
நான் தெரிவித்த கருத்து பொது மக்களை காயப்படுத்தியுள்ளது என்பதையறிந்து வருத்தம் கொள்கிறேன், இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதோடு எனது கருத்து யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் நான் தெரிவிக்கவில்லை, நான் அளித்த பதில் ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் சார்ந்த கருத்தே ஆகும். என அவர் தெரிவித்தார்.
சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் அளித்த பேட்டியில் சென்னை மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இழிவு படுத்தும் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் சமூக வலைத்தள வாசிகள் அவர் மீது கோபம் கலந்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ராதா ராஜன், தான் தெரிவித்த கருத்திற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது.
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் துவங்கும் முன்பே சர்வதேச செய்தி நிறுவனம் என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன். அதில் நான் தெரிவித்த பதிலை பொது மக்கள் தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டுள்ளனர்.
நான் தெரிவித்த கருத்து பொது மக்களை காயப்படுத்தியுள்ளது என்பதையறிந்து வருத்தம் கொள்கிறேன், இதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இதோடு எனது கருத்து யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் நான் தெரிவிக்கவில்லை, நான் அளித்த பதில் ஜனநாயகம் மற்றும் நீதிமன்றம் சார்ந்த கருத்தே ஆகும். என அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X