search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    சேலத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    வயிற்று வலியால் அதிப்பட்டு வந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் எருமா பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 30). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். இதற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் அவருக்கு வயிற்று வலி வந்தது. இதில் வாழ்க்கை வெறுப்படைந்த சுமதி தன் மீது மண்எண்ணை கொட்டி தீவைத்து கொண்டார். இதில் உடல்கருகிய சுமதியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இவது உடலை சேலம் கிச்சிப்பாளையம் போலீசார் மீட்டு விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×