என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 50 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்8 Dec 2016 10:28 AM GMT (Updated: 8 Dec 2016 10:28 AM GMT)
தேனி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 50 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 220 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி:
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகத்தில் டாஸ்டாக் மதுகடைகள் 3 தினங்கள் அடைக்க அரசு உத்தரவிட்டது. இதனால் பலர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், போடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோட்டூர் தங்கராஜ், கம்பம் பாண்டியன், விஜயகுமார், போடி மூர்த்தி, ஜெயராணி, பூதிப்புரம் ஆண்டவர், சின்னமனூர் செந்தில் முருகன், தென்கரை கோபி, மார்க்கையன்கோட்டை முருகேசன், லோயர்கேம்ப் ரவி, கூடலூர் வனிதா, வருசநாடு ராஜசேகர், கண்ட மனூர் பால சுப்பிரமணியன், குமணன்தொழு மூக்கன், சில்வார்பட்டி தங்கமலை, சின்னமனூர் முத்து உள்பட 50 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து 220 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகத்தில் டாஸ்டாக் மதுகடைகள் 3 தினங்கள் அடைக்க அரசு உத்தரவிட்டது. இதனால் பலர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், போடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கோட்டூர் தங்கராஜ், கம்பம் பாண்டியன், விஜயகுமார், போடி மூர்த்தி, ஜெயராணி, பூதிப்புரம் ஆண்டவர், சின்னமனூர் செந்தில் முருகன், தென்கரை கோபி, மார்க்கையன்கோட்டை முருகேசன், லோயர்கேம்ப் ரவி, கூடலூர் வனிதா, வருசநாடு ராஜசேகர், கண்ட மனூர் பால சுப்பிரமணியன், குமணன்தொழு மூக்கன், சில்வார்பட்டி தங்கமலை, சின்னமனூர் முத்து உள்பட 50 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து 220 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X