என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா உடல்நிலை - கடந்து வந்த நாட்கள்...
Byமாலை மலர்5 Dec 2016 3:27 AM GMT (Updated: 5 Dec 2016 3:27 AM GMT)
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக இங்கு காணலாம்.
சென்னை:
செப்டம்பர் 22-ந் தேதி:- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி.
செப். 23-ந் தேதி:- ஜெயலலிதா உடல் நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை.
செப். 24-ந் தேதி:- சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.
செப். 25-ந் தேதி:- ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
செப். 29-ந் தேதி:- ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்.
அக்டோபர் 2-ந் தேதி:- லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
அக். 3-ந் தேதி:- ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.
அக். 4-ந் தேதி:- ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.
அக். 6-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.
அக். 8-ந் தேதி:- நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.
அக். 10-ந் தேதி:- சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் மீண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்தனர்.
அக். 21-ந் தேதி:- தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.
நவம்பர் 19-ந் தேதி:- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
டிசம்பர் 3-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.
டிச. 4-ந் தேதி:- ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
செப்டம்பர் 22-ந் தேதி:- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி.
செப். 23-ந் தேதி:- ஜெயலலிதா உடல் நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை.
செப். 24-ந் தேதி:- சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.
செப். 25-ந் தேதி:- ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
செப். 29-ந் தேதி:- ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்.
அக்டோபர் 2-ந் தேதி:- லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
அக். 3-ந் தேதி:- ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.
அக். 4-ந் தேதி:- ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.
அக். 6-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.
அக். 8-ந் தேதி:- நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.
அக். 10-ந் தேதி:- சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் மீண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்தனர்.
அக். 21-ந் தேதி:- தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.
நவம்பர் 19-ந் தேதி:- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
டிசம்பர் 3-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.
டிச. 4-ந் தேதி:- ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X