search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை - பணம் கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை - பணம் கொள்ளை

    திருவள்ளூர் அருகே பேராசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பி.டி.சி.நகரை சேர்ந்தவர் வினோத். இவரும், மனைவியும் தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டனர்.

    அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து புல்லரம் பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×