search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே கணவன் பிரிந்து சென்றதால் மனைவி தற்கொலை
    X

    தேனி அருகே கணவன் பிரிந்து சென்றதால் மனைவி தற்கொலை

    தேனி அருகே கணவன் பிரிந்து சென்றதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்வி (வயது 45). இவர்களுக்கு ராஜா என்ற மகன் உள்ளார். இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் செல்வி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். எனினும் முருகேசன் திரும்பி தன்னை வந்து அழைப்பார் என்று காத்திருந்தார். ஆனால் முருகேசன் வரவில்லை.

    இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×