search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தளவாய்புரம் அருகே 8 வயது மகனுடன் பெண் மாயம்
    X

    தளவாய்புரம் அருகே 8 வயது மகனுடன் பெண் மாயம்

    8 வயது மகனுடன் இளம் பெண் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது40). இவரது 2-வது மனைவி கிருஷ்ணம்மாள் (30). இவர்களுக்கு அபிஷேக் (8) என்ற மகன் உள்ளான்.

    சம்பவத்தன்று ராஜபாளையம் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு கிருஷ்ணம்மாள் மகனுடன் சென்று உள்ளார். அதன்பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தாய்-மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    இது தொடர்பாக தளவாய்புரம் போலீசில் மனோகரன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குருவத் தாய் வழக்குப்பதிவு செய்து மாயமான கிருஷ்ணம்மாள் மற்றும் அபிஷேக்கை தேடி வருகிறார்.

    Next Story
    ×