என் மலர்
செய்திகள்

பேராவூரணி அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
பேராவூரணி அருகே வீட்டில் கோபித்துக்கொண்டு சென்றவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேராவூரணி:
பேராவூரணி அருகே கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த இளங்கோ மகன் செல்வபாண்டி(வயது25) தச்சுதொழில் செய்து வந்தார். இவரது தந்தை இளங்கோ இறந்து விட்டதால் தாய் சித்ராவுடன் வசித்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வீட்டில் கோபித்து கொண்டு சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை இந்நிலையில் நேற்று பேராவூரணி பேரூராட்சி குப்பை கொட்டும் பூங்கா வளாகத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Next Story