என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணமங்கலம் அருகே தலைமை ஆசிரியர் தற்கொலை
Byமாலை மலர்7 Sep 2016 10:05 AM GMT (Updated: 7 Sep 2016 10:05 AM GMT)
கண்ணமங்கலம் அருகே தலைமை ஆசிரியர் நோய் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரவேலு. (வயது 53). இவர் திருவண்ணாமலை அருகே உள்ள செல்லாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை அவர் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குமாரவேலுவின் அருகே பூச்சி மருந்து கிடந்தது. அவர் அந்த மருந்தை குடித்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் குமாரவேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குமாரவேலுவுக்கு குடிப்பழக்கம் உண்டாம். அளவுக்கு அதிகமாக குடித்ததால் நோய் பட்டார். வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.இந்த நோய் கொடுமை தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட குமாரவேலுவுக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சண்முகப்பிரியா(23), சுபலட்சுமி (20), நிரோஷா(17) ஆகிய மகள்களும், யுவராஜ் (13) என்ற மகனும் உள்ளனர்.
சுபலட்சுமி எம்.சி.ஏ.வும், நிரோஷா பிளஸ்-2வும், யுவராஜ் 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
கண்ணமங்கலம் அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரவேலு. (வயது 53). இவர் திருவண்ணாமலை அருகே உள்ள செல்லாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை அவர் வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குமாரவேலுவின் அருகே பூச்சி மருந்து கிடந்தது. அவர் அந்த மருந்தை குடித்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் குமாரவேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குமாரவேலுவுக்கு குடிப்பழக்கம் உண்டாம். அளவுக்கு அதிகமாக குடித்ததால் நோய் பட்டார். வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.இந்த நோய் கொடுமை தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட குமாரவேலுவுக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சண்முகப்பிரியா(23), சுபலட்சுமி (20), நிரோஷா(17) ஆகிய மகள்களும், யுவராஜ் (13) என்ற மகனும் உள்ளனர்.
சுபலட்சுமி எம்.சி.ஏ.வும், நிரோஷா பிளஸ்-2வும், யுவராஜ் 8-ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X