என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அலங்காநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்6 Sep 2016 11:32 AM GMT (Updated: 6 Sep 2016 11:32 AM GMT)
அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் அதே ஊரைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இவரது உறவினர்கள் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள சில பொருட்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இந்த நேரத்தில் அலங்காநல்லூரைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 26) என்பவர் திடீரென மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அரசு ஊழியர்கள் பணியை செய்யவிடாமல் தடுத்தார். வட்டார மருத்துவர் தனசேகரன் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், தகராறு செய்த காளிதாசை கைது செய்தார். இது சம்பந்தமாக மேலும் சிலர் மீது வழக்குபதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் அதே ஊரைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இவரது உறவினர்கள் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். இதில் அங்குள்ள சில பொருட்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து நேற்று வழக்கம்போல் மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இந்த நேரத்தில் அலங்காநல்லூரைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 26) என்பவர் திடீரென மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அரசு ஊழியர்கள் பணியை செய்யவிடாமல் தடுத்தார். வட்டார மருத்துவர் தனசேகரன் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், தகராறு செய்த காளிதாசை கைது செய்தார். இது சம்பந்தமாக மேலும் சிலர் மீது வழக்குபதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X