என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரிமுனையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம் - ரெயில்வே ஊழியர் கைது
Byமாலை மலர்9 Aug 2016 12:03 PM GMT (Updated: 9 Aug 2016 12:03 PM GMT)
பாரிமுனையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டிய ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). எழும்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்றார். பின்னர் 8 மணி அளவில் ஓட்டலை விட்டு வெளியில் வந்த அவர் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை முதலில் இடித்து தள்ளிய கார், அரண்மனைக்காரன் தெருவில் தாறுமாறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த கார் நடந்து சென்றவர்களையும் இடித்து தள்ளியது.
இதில் அபேஸ் பஞ்சாலி என்பவரின் காலில் முறிவு ஏற்பட்டது. ஜெயகுமார், மோகன், பாலசுப்பிரமணி மற்றும் பூ வியாபாரம் செய்து வந்த அலமேலு ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அபேஸ் பஞ்சாலி மட்டும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விரைந்து சென்று காரை மீட்டு விசாரணை நடத்தினார். தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் மோதி நின்றது. வேகமாக காரை ஓட்டிய டிரைவர் சேகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). எழும்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்றார். பின்னர் 8 மணி அளவில் ஓட்டலை விட்டு வெளியில் வந்த அவர் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை முதலில் இடித்து தள்ளிய கார், அரண்மனைக்காரன் தெருவில் தாறுமாறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த கார் நடந்து சென்றவர்களையும் இடித்து தள்ளியது.
இதில் அபேஸ் பஞ்சாலி என்பவரின் காலில் முறிவு ஏற்பட்டது. ஜெயகுமார், மோகன், பாலசுப்பிரமணி மற்றும் பூ வியாபாரம் செய்து வந்த அலமேலு ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அபேஸ் பஞ்சாலி மட்டும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விரைந்து சென்று காரை மீட்டு விசாரணை நடத்தினார். தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் மோதி நின்றது. வேகமாக காரை ஓட்டிய டிரைவர் சேகர் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X