என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் நகை கடையில் செயின் திருடிய பெண் கைது
வேலூர்:
வேலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 35). இவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வேலூர் கஸ்பா, வசந்தபுரம் பகுதியை சேர்ந்த விஜயா (50) தனது உறவினர் ஒருவருடன் பாபுலாலின் நகை கடைக்கு நேற்று சென்றார்.
கடையில் சிறிது நேரம் நகை வாங்குவது போல நகைகளை பார்த்து விட்டு டிசைன்கள் பிடிக்கவில்லை என்று பாபுலாலுவிடம் கூறிவிட்டு கடையை விட்டு வெளியே சென்றார். பின்னர் நகைகளை சோதனை செய்தபோது அதில் 1 பவுன் சங்கிலி காணாமல் போயிருந்தது. சந்தேகம் அடைந்த அவர் விஜயாவை பிடித்து அவரிடம் இருந்து அந்த தங்கச்சங்கிலியை கைப்பற்றினார். அவர் நகை திருடியது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. விஜயாவுடன் வந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயாவை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த நபரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்