search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மற்றும் போலி துப்பாக்கி.

    கொடைக்கானலில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

    • காரில் அதிவேகமாக சென்ற வாலிபர்களை பொதுமக்கள் திட்டியதால் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரின் முக்கிய சுற்றுலா தலங்களில் வெளியூர் நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிக வேகத்தில் செல்வது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக மோட்டார் பைக்கில் வரும் வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபட்டு செல்பி எடுத்து கொள்வதும், விபத்தில் சிக்கி வருவதும் நடப்பதுண்டு.

    பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை கண்டித்தாலும் இப்பிரச்சினை ெதாடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த பகத் மற்றும் விஷ்ணு ஆகிய 2 பேர் அதிவேகமாக பஸ்நிலையத்தில் காரில் வந்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அச்சத்தில் மிரண்டு ஓடினர். பொதுமக்கள் சத்தம் போடவே அவர்களை பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

    அது ெபாம்மை துப்பாக்கி என தெரியாததால் பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். வியாபாரிகள் அவர்களை சுற்றிவளைத்து கொடைக்கானல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×