search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே பொங்கலுக்காக சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    ஆண்டிபட்டி அருகே பொங்கலுக்காக சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

    • முதலக்க ம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாராயக் கேனுடன் நின்று கொண்டிருந்தவர்களை வைகை அணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமை யிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
    • சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகில் உள்ள முதலக்கம்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது27). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதரசனூரில் சிமெண்ட் கலவை வாகனத்தில் டிரை வாக வேலை பார்த்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகை க்காக தனது ஊருக்கு வந்தார். அப்போது தனது நண்பரான மணிவண்ணன் (28) என்பவருடன் சேர்ந்து கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கல்வராயன்மலையில் இருந்து 2½ லிட்டர் சாரா யத்ைத வாங்கிக்கொண்டு பொங்கல் பண்டிகையை தனது ஊரில் கொண்டாட முடிவு செய்தார்.

    அதன்படி முதலக்க ம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சாராயக் கேனுடன் நின்று கொண்டிருந்த அவர்களை வைகை அணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அதன் கேனில் நாட்டுச்சாரயம் இருந்தது தெரிய வரவே அதனை கைப்பற்றினர். மேலும் மருதுபாண்டி, மணி வண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×