search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு   13 ஆண்டுகள் சிறை
    X

    கோப்பு படம்

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    திண்டுக்கல்:

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்தவர் ராசு மகன் ஆண்டிச்சாமி (வயது24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 2019ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வடமதுரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    விசாரணை முடி வடைந்த நிலையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண்டிச்சாமிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்ட னையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×