search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாட்களில் குணமாகிவிடுகிறார்கள்.

    தருமபுரி,

    தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 400-ஐ கடந்து விட்டது.

    இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவ மனைகள் என்று சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியா ளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் தினமும் கொ ரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாக ங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை.

    சளி, இருமல், காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு போன்ற அறிகுறிகள்தான் உள்ளன. புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாட்களில் குணமாகிவிடுகிறார்கள்.

    மூக்கில் இருந்து நீர் கொட்டினால் அது வைரஸ் காய்ச்சல். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி மற்றும் கடுமையான தலைவலி இருக்கும்.

    எனவே இந்த அறிகுறி களை வைத்து அது வைரஸ் காய்ச்சலா அல்லது கொரோனா தொற்றா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    தற்போது கொரோனா வைரஸ் தருமபுரி மாவட்ட த்தில் பரவ தொடங்கி விட்டது.

    இதனால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முககவசம் அணிய வேண்டும். மேலும் வீட்டிற்கு வந்த உடன் கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்ளலாம்.

    தற்போது பரவி வரும் புதிய வகை தொற்று 3 நாட்களுக்குள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி வருகிறது.

    இணை நோய் உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது. உடன டியாக மருத்துவ மனையை அனுக வேண்டும்.

    நாம் போட்டுக்கொண்ட கொரோனா தடுப்பூசியும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் புதிய வகை கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள போதுமானதாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை. தேவையான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.

    இருமல், தும்மல் வரும்போது கைகளை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு நீர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×