என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/09/1743671-.jpg)
தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும்.
- தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை யத்தின் தலைவருமான (பொறுப்பு) முனுசாமி தெரிவித்துள்ளதாவது:-
மாவட்ட அளவில் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதளின்படியும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றகளிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும்.
இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றகளில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)