search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்  தேசிய மக்கள் நீதிமன்றம்
    X

    தருமபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

    • ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும்.
    • தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை யத்தின் தலைவருமான (பொறுப்பு) முனுசாமி தெரிவித்துள்ளதாவது:-

    மாவட்ட அளவில் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதளின்படியும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றகளிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

    சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும்.

    இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றகளில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×