search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு நிலவரம்
    X
    வாக்கு நிலவரம்

    தமிழகத்தில் 1 மணி வரை 39.61 சதவீத வாக்குகள் பதிவு

    தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

    காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில்  தமிழக சட்டசபை தேர்தலில் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

    தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    புதுச்சேரியில் மதியம் 1.30 மணி வரை 53.01 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×