என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி பறிமுதல் - தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு பேட்டி
Byமாலை மலர்4 April 2021 9:30 AM GMT (Updated: 4 April 2021 9:30 AM GMT)
தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.412 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 7 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது. அதன் பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும். பிரசாரங்கள் எதுவும் செய்யக்கூடாது.
தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.412 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டையில் ஒரு வீட்டில் இருந்து ரூ.91.56 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் ரூ.1.3 கோடியும், பாளையங்கோட்டையில் ரூ.15 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X