என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா தலைமையில் இன்று மாலை அ.தி.மு.க. எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
Byமாலை மலர்27 Jan 2017 6:57 AM GMT (Updated: 27 Jan 2017 6:57 AM GMT)
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சசிகலா தலைமையில் நடைபெறுகிறது.
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கூடியது.
முதல் நாள் அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதற்கு மறுநாள் (24-ந்தேதி) ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர கூட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இன்று முதல் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்க சசிகலா முடிவு செய்துள்ளார்.
இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் சசிகலா பங்கேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்த கூட்டம் முடிந்ததும் போயஸ்கார்டனில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சசிகலா ஆலோசனை வழங்க உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கூடியது.
முதல் நாள் அன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதற்கு மறுநாள் (24-ந்தேதி) ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர கூட்டமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இன்று முதல் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்க சசிகலா முடிவு செய்துள்ளார்.
இதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் சசிகலா பங்கேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்த கூட்டம் முடிந்ததும் போயஸ்கார்டனில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சசிகலா ஆலோசனை வழங்க உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X